குறள் எண் : 63
அறத்துப்பால்
மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல் அதிகாரம்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
விளக்கம் :
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.